தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழுமலையானை தினமும் முதலில் வழிபடும் பாக்கியசாலி

Go down

ஏழுமலையானை தினமும் முதலில் வழிபடும் பாக்கியசாலி Empty ஏழுமலையானை தினமும் முதலில் வழிபடும் பாக்கியசாலி

Post  amma Sun Jan 13, 2013 2:45 pm


திருப்பதி கோவிலில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை இதன் பின்னணியில் உள்ள புராணக்குறிப்பு வருமாறு:-

பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்து விட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அவர் தவம் செய்தார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.

பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர். இரவில் ஏகாந்த சேவை முடிந்த பின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனம் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின்தான் நடை அடைக்கப்படுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum