தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறைவனுக்கு நன்றி!

Go down

இறைவனுக்கு நன்றி! Empty இறைவனுக்கு நன்றி!

Post  birundha Sun Feb 10, 2013 9:10 pm

* இறைவா! அறிவையும், அறிவின்மையையும் ஒன்றாக இணைத்து உலகத்தில் உயிர்களை உண்டாக்கியவரே!. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களைப் படைத்தவரே! இந்த உலகத்தை அழகுப்படைப்புகளால் நிறைத்தாய். பக்தி என்னும் அரிய நிலையைக் கொடுத்திருக்கிறாய். பரம்பொருளே! பக்தியால் உன்னை அறியும் சக்தியையும் கொடுத்துள்ளாய்.
* பக்தியால் இவ்வுலகில் பலவித மேன்மைகளைப் பெறும் பாக்கியம் தந்தாய். மனதை தெளிவாக்கி, செய்யும் செயல்களில் செம்மையைத் தந்தாய். நெஞ்சில் சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சி வந்ததும் பக்தியால் தான்.
* பொய்ச்சுகங்களை விட்டு உண்மை இன்பத்தை உணரச் செய்தாய். தீமையைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்துப் போரிடும் வீரத்தைத் தந்தாய். உடம்பில் தோன்றிய பிணிகளைப் போக்கி அருள் செய்தாய்.
* உன்னருளால், குன்றினைப் போல இருதோள்களும் சக்தி பெற்றுள்ளன. இதனால் தீமைகளை எதிர்க்கும் சக்தி கிடைத்திருக்கிறது. இதனால் வெற்றியை மட்டுமே எப்போதும் சுவைக்கிறேன். வெற்றிக் களிப்பில் பயம் என்பதும் அற்றுப் போனது. இதற்காக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum