தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணனை வணங்கினால் தீமையில்லை

Go down

கண்ணனை வணங்கினால் தீமையில்லை Empty கண்ணனை வணங்கினால் தீமையில்லை

Post  birundha Sun Feb 10, 2013 8:40 pm

* அறிவின் உருவமாய் ஒளிர்கின்ற கண்ணா! என் உயிரில் அமுதத்தினைப் பொழிவாய். என்னுள்ளே கருவினைப் போல் வளர்ந்து அருள்செய்பவனே! கமலத்தில் வீற்றிருக்கும் திருமகளோடு இருப்பவனே! திருமகளிடம் இணைந்திருப்பது போல என் உயிரோடு இரண்டறக் கலப்பாயாக.
* என் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருப்பவனே! இவ்வுலகம் அழியும் ஊழிக்காலத்தில் அசுரர்களின் தலைகள் சிதறும்படியாகச் செய்து எங்களைக் காப்பாற்று.
* அமரர்களாகிய தேவர்கள் வணங்கும் பெருமானே! உன்னையே துணையாகப் போற்றி வழிபடுவேன். கடலில் இருந்து எழுகின்ற கதிரவனைப் போல, என் உள்ளக்கடலில் இருந்து நீ எழுந்து வர வேண்டும்.
* கருமேனி வண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் உள்ளங்கள் அழியாத பேரின்பத்தினை உறுதியாகப் பெறும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால் எங்களுக்கு கிடைக்கும்.
* உனது பெருமைகளைப் பாடினால் தீமை சிதைந்து பெருநன்மை விளையும். நிலமாமகளின் தலைவனாகிய கண்ணனே! உன் புகழை என் மனம் என்றும் பாடிக்கொண்டிருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum