தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குலசை முத்தாரம்மன் வழிபாடுகளும், பலன்களும்

Go down

குலசை முத்தாரம்மன் வழிபாடுகளும், பலன்களும் Empty குலசை முத்தாரம்மன் வழிபாடுகளும், பலன்களும்

Post  amma Sun Jan 13, 2013 1:33 pm

பொங்கல் வைத்து வழிபடுவது குலசையில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவென்றால் ஆன்மாவினுள் புகுந்து நம்மைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் அகங்காரம், ஆணவம்,. கோபம்,. மோகம் உள்ளிட்டவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்குச் சமர்ப்பனம் செய்வது என்பதே.

இதன் மூலம் நமது ஆன்மா சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறுகிறது என்பது நம்பிக்கை,. அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் அளவிடற்கரியது.

எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சபொடி பஞ்சகவ்வியம் பஞ்சா மிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும்.

விளக்கு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. ஐம்பூதங்களில் நெருப்பும் ஒன்று. இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்றுய்யலாம் என்பதே இதன் தத்துவம். எனவே தான் பவுர்ணமி திதியில் இத்திருத்தலத்தில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum