தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழைக்காலத்தில் எந்த மாதிரி மேக் அப் போடலாம்?

Go down

மழைக்காலத்தில் எந்த மாதிரி மேக் அப் போடலாம்? Empty மழைக்காலத்தில் எந்த மாதிரி மேக் அப் போடலாம்?

Post  ishwarya Thu Feb 07, 2013 1:14 pm

கோடை காலமோ குளிர்காலமோ மேக் அப் போடுவது சிலரது வாடிக்கை. சீசனுக்கு ஏற்ப மேக் அப் போட்டால் மட்டுமே அழகு அதிகரிக்கும். இல்லை எனில் முகத்தின் இயற்கையான அழகே மாறிவிடும். மழைக்காலம் தொடங்கிவிட்டது. வெளியே செல்லவேண்டும் எனில் அதற்கேற்ப மேக் அப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு கூடுதல் அழகு கிடைக்கும். மழைக்கால மேக் அப் டிப்ஸ் ஐடியா கொடுத்துள்ளனர் அழகியல் நிபுணர்கள் அசத்துங்களேன்.

தூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம் எனவே முதலில் முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும்.

இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தண்­ணீரால் கழுவ வேண்டும்.

ஐஷேடோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்­ரில் கரையாத மஸ்டுகாரா உபயோகிக்க வேண்டும்.மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம்.

மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலுவற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்.

மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம், கூந்தலை வலுவிழக்க செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிகமாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலாம். தலையை சற்றே தளர்வாக பின்னலாம். இறுக்கமான பேன்டுகள் போடுவதோ, தலையை ப்ரீஹேர் விடுவதோ கூடாது.

மழைக்காலத்தில் சாலைகளில் சேறு இருக்கும் என்பதால், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் உடையணியலாம். கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்கவேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. அதேபோல் டெனிம் ஜீன்ஸ் போடுவதை தவிர்க்கவேண்டும். காட்டன் உடைகளையோ, த்ரி போர்த் பேண்ட்களை போடலாம்.

மழைக்காலத்தில் மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவான நகைகளை அணியலாம்.மழைக்காலத்தில் குடையும், ரெயின் கோட்டும் அவசியம். எனவே மனதிற்கு இதமான நிறங்களில் அவற்றை தேர்ந்தெடுக்கலாம். மழைக்காலத்தில் லெதர் ஷு, ஹை ஹீல்ஸ் போன்றவைகளை தூக்கி தூரப்போடுங்கள். லைட் வெயிட் செருப்புகளை போடுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum