தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள பகவதி அம்மன் கோயில் கணக்கன்பாளையம்

Go down

மலையாள பகவதி அம்மன் கோயில் கணக்கன்பாளையம் Empty மலையாள பகவதி அம்மன் கோயில் கணக்கன்பாளையம்

Post  amma Sat Jan 12, 2013 3:45 pm


ஸ்தல வரலாறு....

மூலவர்: – மலையாள பகவதி
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – கணக்கன்பாளையம்
மாவட்டம்: – ஈரோடு
மாநிலம்: – தமிழ்நாடு ஈரோடு

மாவட்டம் கணக்கன்பாளையத்தில் அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மன், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, தீராத துன்பங்களைத் தீர்த்து வைக்கிறாள். பக்தர்களுக்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து வருகிறாள். பக்திப் பரவசத்தோடும், பயபக்தியோடும் கும்பிடுவோருக்கும் பாசத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.

பூஜைகள்....

காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என தினமும் மூன்று முறை பூசைகள் செய்யப்படுகின்றன. மாதம்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு பூசையும், அலங்காரம், அபிசேக, ஆராதனைகளும், இரவில் கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பெண்கள் 108 திருவிளக்கு பூசையில் கலந்து கொண்டு பூஜித்து வருகின்றனர் சரசுவதி பூஜையும், கார்த்திகை தீபத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் தங்கள் நோயினை போக்க இக்கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் தங்கி நந்தா தீபம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

எந்த நோயாக இருந்தாலும் இந்த அம்பாளை மனதில் நினைத்து கோயிலை சுற்றியுள்ள இலைதழைகளை பறித்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டால் அந்த நோய் வெப்பத்தை கண்ட பனிபோல நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு முழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்....

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum