தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 நடிகைகள் பலி

Go down

மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 நடிகைகள் பலி  Empty மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 நடிகைகள் பலி

Post  ishwarya Fri May 24, 2013 4:49 pm

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த துணை நடிகைகள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை களவாணி திரைப்பட இயக்குநர் சற்குணம் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம், மன்னார்குடி, வடுவூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நாளை (27ம் தேதி) முதல் வடுவூர் மற்றும் எடமேலையூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிப்பதற்காக துணை நடிகைகள் 8 பேர் சென்னையில் இருந்து நேற்று வந்தனர். அவர்கள் எடமேலையூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மதியம் 12 மணியளவில் துணை நடிகைகள் தரமணியை சேர்ந்த விஜயலட்சுமி (32), சரஸ்வதி (18) ஆகியோர், மண்டபத்தின் அருகே இருந்த பிடாரி குளத்தில் குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாக குளத்தில் நீந்தி விளையாடி கொண்டிருந்த இருவரும், குளத்தின் மையப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆழமாக இருந்ததால் தண்ணீரில் மூழ்கினர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள், குளத்துக்குள் இறங்கி அவர்களை காப்பற்ற முயன்றனர். ஒரு வழியாக உயிருக்கு போராடிய நிலையில் இருவரையும் கரையேற்றினர்

ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதைத் தொடர்ந்து இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum