தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் டெங்கு இல்லை

Go down

 தமிழகத்தில் டெங்கு இல்லை  Empty தமிழகத்தில் டெங்கு இல்லை

Post  ishwarya Fri May 24, 2013 4:34 pm

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று பேரவையில் அமைச்சர் வீரமணி கூறினார். மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் திருக்கோவிலூர் வெங்கடேசன் (தேமுதிக) பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் முடியும் முன்பே வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். அமைச்சர் வீரமணி: எந்த மருத்துவமனை என்று குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். (தொடர்ந்து உறுப்பினர் வெங்கடேசன் கூறிய கருத்துக்கள் நீக்கப்பட்டன.

வெங்கடேசன்: முன்பு டெங்கு காய்ச்சல் எப்போதாவது தான் வரும். ஆனால், இப்போது வருடம் முழுவதும் டெங்கு இருக்கிறது. இதற்கு காரணம் கொசு. வீரமணி: டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து கொசு ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வெங்கடேசன்: அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு எண்ணிக்கை குறைந்துள்ளது.

வீரமணி: அரசு மருத்துவமனைகளில் 92 சதவீத மகப்பேறு நடைபெறுகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணம் தரம் குறைவு தான். வீரமணி: காப்பீட்டு திட்டத்தில் 801 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 120 மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள்.

முதல்வர் ஜெயலலிதா: முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் எல்லா அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி ழீ629 கோடி. மொத்த மருத்துவமனைகள் 817. இதுவரை 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் ரூ.623 கோடிக்கு மருத்துவ சிகிச்சை பயன்பெற்றுள்ளனர். 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நடப்பது திமுக ஆட்சியா? அதிமுக ஆட்சியா என்று உறுப்பினர் குழப்பத்தில் இருப்பது போல தோன்றுகிறது. திமுக ஆட்சியில் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மட்டும் இடம் பெற்று இருந்தன. இப்போது தான் அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. (தொடர்ந்து வெங்கடேசன் கூறிய கருத்துக்கள் நீக்கப்பட்டன.) அமைச்சர் வைத்திலிங்கம்: இந்த திட்டப்படி தாங்கள் விரும்பும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் சென்று சிகிச்சை பெறலாம்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: திமுக ஆட்சியில் இந்த திட்டம் தனியார் நிறுவனத்தாரால் செயல்படுத்தப்பட்டது. இப்போது அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீரமணி: திமுக ஆட்சியில் இந்த திட்டப்படி அரசுக்கு கிடைத்தது ரூ.12 கோடி தான். இப்போது அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.234 கோடி கிடைத்துள்ளது.

தொடர்ந்து வெங்கடேசன் பேச முயன்றபோது பேரவை தலைவர் தனபால் நேரம் முடிந்து விட்டது என்று கூறி அமரச் சொன்னார். உடனே முதல்வர் எழுந்து உறுப்பினர் கேட்டதால் தான் காப்பீடு திட்டம் பற்றி விளக்க முடிந்தது எனவே மேலும் 5 நிமிடம் தாருங்கள் என்றார். அதற்கு வெங்கடேசன் நன்றி தெரிவித்துவிட்டு மேலும் தொடர்ந்து 5 நிமிடம் பேசினார்.

வெங்கடேசன்: மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய போதிய மருத்துவர்கள் இல்லை. வீரமணி: மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மூலம் கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. வெங்கடேசன்: என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் நடக்கவில்லை. வைத்திலிங்கம்: அங்கு யாரும் போயிருக்க மாட்டார்கள். வெங்கடேசன்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்கள் தான் இசிஜி எடுக்கிறார்கள். இதற்கு மாற்றுவழி காண வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum