தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை

Go down

வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை  Empty வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை

Post  ishwarya Fri May 24, 2013 4:29 pm



தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பயனாளிகள், தங்கள் வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கே.கே.நகர் சவுபாக்கியா காலனி குடியிருப்புவாசிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கேட்டும், தடையில்லா சான்று கேட்டும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியோரிடம் விண்ணப்பித்தனர்.

ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள், ஏற்கனவே இருந்த கட்டிடங்களை இடிக்கவும் , தடையில்லா சான்று வழங் கவும், புதிய கட்டிடங்களை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கொடுத்த மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர பெரு நகர வளர்ச்சிக்குழுமத்துக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி பால் வசந்தகுமார், நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்த அளித்த தீர்ப்பு வருமாறு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், அவர்களுக்கான விற்பனை ஒப்பந்தம் முடித்த பிறகு, அவர்களுக்கு அந்த வீட்டின் முழு உரிமை வழங்கப்படுகிறது. அதை இடிக்கவோ, அதேபோல வீடு கட்டவோ, கூடுதலாக அறைகள் கட்டவோ, முழு உரிமை உண்டு. ஏற்கனவே இருந்த பழைய வீட்டை இடித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்டும் பணி நடக்கும் பட்சத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மறுப்பு தெரிவிக்க முடியாது.

குடியிருப்பு பொதுப்பகுதியை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட தடையில்லா சான்று பெற தேவையில்லை. அதே நேரம், ஒதுக்கீடு பெற்ற குடியிருப்புவாசியோ அல்லது அந்த வீட்டை வாங்கிய மூன்றாம் நபரோ, அந்த வீட்டையோ அல்லது அங்கு கட்டப்படும் புதிய கட்டிடத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை
»  மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்: சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு
» வீடு வாங்கி கொடுத்ததாக வதந்தி; நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை – டைரக்டர் விஜய் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum