தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எம பயம் நீக்கும் ஸ்ரீ காலந்தக மூர்த்தி

Go down

ஸ்ரீ -   எம பயம் நீக்கும் ஸ்ரீ காலந்தக மூர்த்தி Empty எம பயம் நீக்கும் ஸ்ரீ காலந்தக மூர்த்தி

Post  ishwarya Thu May 23, 2013 12:32 pm

காலந்தக மூர்த்தியார் காலனை வென்றவர்
காலனை யஞ்சுவார் கால்பணிவர்-காலம்
அறுபதும் ஆனவர் ஆக்குவர்கல் யாணம்
பெறுவார்கள் நீண்ட ஆயுள் பேறு!

பதினாறு வயதே வாழ்வாய்! என்ற வரம் பெற்றவர் மார்க்கண்டேயன். மரண காலம் நெருங்கியதும் யமதர்ம ராஜன் மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி அவனை நோக்கித் தம் பாசக் கயிற்றினை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அங்கிருந்த சிவலிங்கத்தினைத் தன் இரு கைகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

அவனது சிவ பூஜையில் மகிழ்ந்த எம்பெருமான் மார்க்கண்டேயனைக் காத்திட, யமதர்மராஜனைத் தனது இடது பக்க காலால் எட்டி உதைத்து, மார்க்கண்டேயருக்கு சாகா வரமளித்தார். அந்த கோலமே - காலந்தகம் எனப்படுகிறது.

திருக்கடவூரில் தான் இந்த அற்புதம் நடந்தது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இவரை வணங்கினால் எம பயம் நீங்கும். இங்குள்ள ஈசனை சித்தர்கள் தினமும் வழிபடுவதாக கருதப்படுகிறது. 60 வயதை கடந்தவர்கள் இங்கு சஷ்டியபத் பூர்த்தி விழா நடத்துவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum