தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எமதர்மராஜன் கோவில்

Go down

எமதர்மராஜன் கோவில் Empty எமதர்மராஜன் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 3:26 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய கண்மாய் அருகே உள்ளது கம்மாபட்டி கிராமம். இந்த கிராமத்தில் பத்திரகாளியம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. ஆனால் இந்த கோவில்கள் வரிசையில் எமராஜா என்ற பெயரில் எமதர்மர் கோவில் ஒன்றும் உள்ளது.

இங்கு ஓவிய வடிவில் எமதர்மர் காட்சி தருகிறார். கோவிலில் வேறு சிலைகள் ஏதும் இல்லை. மூலஸ்தானத்தில் மட்டும் எமதர்மர் எருமைவாகனத்தில் கம்பீரமாக வீற்றிருந்து கதாயுதத்துடன் வலம்வருவது போல் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் ஆவணி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த திருவிழா நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய,விடிய நடக்கிறது. எமன்திசை தென் திசையாம். இதை கடைபிடிக்கும் வகையில் திருவிழா நாளில் தென்திசைக்கு சென்று மயானம் அருகில் சிறப்பு பூஜை செய்கின்றனர். கரும்பு, பிச்சிப்பூ வைத்து பூஜை நடக்கிறது. அங்கு பூஜை நடக்கும் வேளையில் இங்கு கோவில் முன்பு எமனுக்கு பிடித்தமான பணியாரம் சுடும்பணி நடக்கிறது.

இதற்காக பெரிய அடுப்பு அமைக்கப்பட்டு தீ மூட்டப்படுகிறது. பெரிய சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பணியாரம் ஆயிரக்கணக்கில் சுடப்படுகிறது. பணியாரம் மலைபோல் குவிந்ததும் அதை அப்படியே எமனுக்கு வைத்து பூஜை நடக்கிறது. பின்னர் அந்த பணியாரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

எமனுக்கு திருவிழா ஒரு நாள் நடந்தாலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓவிய வடிவில் உள்ள எமதர்மரை சிலையாக வடித்து வழிபட சிலர் ஆலோசனை கூறினாலும் இவர்கள் தங்களது பாரம்பரியத்தை மாற்ற விரும்பவில்லை. தங்கள் முன்னோர் வழிபட்ட விதத்திலேயே வணங்கவும், திருவிழா நடத்தவும் முடிவு செய்து அதன்படி நடத்தி வருகின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum