விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
Page 1 of 1
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
ஸ்தல வரலாறு....
திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் அமாவாசை நாளில், சிவனுக்கு அன்னா பிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடு கின்றனர். அமாவாசை தோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது. சிவனின் தாண்டவத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத மகரிஷி ஆகி யோர் அவரது பாதத்தை (உள்ளங்கால்) தரிசிக்க விரும்பினர்.
பார்வதியின் ஆலோசனைப்படி இங்கு வந்து, மண்ணில் சிவலிங்கம் வடித்து வழிபட்டனர். மகிழ்ந்த சிவன், அவர்கள் முன் தோன்றி நடனமாடி பாத தரிசனம் காட்டியருளினார். பதஞ்சலி மனோகரர் எனப்பெயரும் பெற்றார். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதியில் சிவன் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம்.
திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவன் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது. பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் செய்வர்.
இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள ( தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர்.
பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சிய டைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படு வோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
திறக்கும் நேரம்: காலை 7.30-12 மணி-12 மணி, மாலை 4.30-7.30 மணி.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது.
திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் அமாவாசை நாளில், சிவனுக்கு அன்னா பிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடு கின்றனர். அமாவாசை தோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது. சிவனின் தாண்டவத்தை தரிசித்த பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத மகரிஷி ஆகி யோர் அவரது பாதத்தை (உள்ளங்கால்) தரிசிக்க விரும்பினர்.
பார்வதியின் ஆலோசனைப்படி இங்கு வந்து, மண்ணில் சிவலிங்கம் வடித்து வழிபட்டனர். மகிழ்ந்த சிவன், அவர்கள் முன் தோன்றி நடனமாடி பாத தரிசனம் காட்டியருளினார். பதஞ்சலி மனோகரர் எனப்பெயரும் பெற்றார். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதியில் சிவன் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம்.
திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். சிவன் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது. பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் செய்வர்.
இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள ( தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர்.
பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சிய டைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படு வோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
திறக்கும் நேரம்: காலை 7.30-12 மணி-12 மணி, மாலை 4.30-7.30 மணி.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
» விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
» விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
» அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
» பதஞ்சலி யோக சூத்ரம்
» விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
» விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
» அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
» பதஞ்சலி யோக சூத்ரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum