தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்

Go down

ஸ்ரீ - சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்  Empty சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள்

Post  meenu Thu Feb 07, 2013 4:17 pm

பெறற்கரிய பிறவியாம் மானிடப் பிறவியெடுத்து உயர்ந்த நிலையையும் அடைந்தவன் கூட ஸாஸ்வதமான பரமானந்த நிலையைப் பெற வேண்டுமானால் அவனுக்கு ஒரு நல்ல குரு தேவை. ஸத்குருவின் பெருமைகளைக் கூறியதோடு நில்லாமல் தானும் குருபக்தியையும், குருசேவைகயையும் சிரமேற் கொண்டொழுகினார் ஆதிசங்கரர்.

அத்தகைய பெருந்தகையால் நிறுவப்பட்டதும், குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆகும். இந்தப் பீடம் பல கிளைகளைக் கொண்டு ஹிந்து மதத்தின் பெருமைகளைக் காப்பாற்றி வருகிறது. அவ்வாறாகிய கிளைகளில் ஒன்று சென்னை, மேற்கு மாம்பலம் கிருபாசங்கரித் தெருவில் உள்ளது.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ மஹாசன்னிதானம், ஸ்ரீ சன்னிதானம் ஆகியோரின் பரம அனுக்கிரகத்தால் 1977-ம் ஆண்டு நவம்பர் 14, 15 அன்று பூஜை செய்யப்பட்டு, 1978-ம் ஆண்டு ஸ்ரீ பீடத்தின் கிளையை நிறுவதற்காக வாங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி (தை மாதம் அசுவதி நட்சத்திரம்) அன்று வைதீக முறைப்படி மகாகும்பாபிஷேகம் நடந்தேறியது. 1995-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தேறியது.

ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. சன்னதியிலுள்ள மூலவர் மற்றும் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் தினப்படி மற்றும் விசேஷ தின பூஜைகள் ஆதி நியமத்துடனும் ஆதி விமரிசையுடனும் நடத்தப்படுகிறது.

இங்குள்ள சாரதா தேவியானவள் `ப்ரம்ம வித்யா' ஸ்வரூபமாக அதாவது பிரம்ம விஷ்ணு சிவன் மற்றும் ஸக்தி ஸ்வரூபங்களாகிய சரஸ்வதி, லஷ்மி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே ஸ்வரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் பமாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

சர்வ வல்லமைகளையும் கொண்டவளாக, கருணையின் திருவுருவமாக அருள் பாலிக்கிறாள் அம்பிகை. இங்கு வீற்றிருக்கும் சாரதா அம்பாளுக்கு நான்கு கரங்கள். ஒன்று சின்முத்திரையுடன் விளங்குகிறது. இது ஜீவன் மற்றும் பிரம்மத்தின் ஐக்கியத்தைக் குறிப்பதாகும். இன்னொன்று ஜபமாலையுடன் விளங்குகிறது. அந்தக் கையின் மேல் கொஞ்சும் கிளி ஒன்றும் உள்ளது. இது ஜீவ உற்பத்திக்கு மூலாதாரமான புஜத்தைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கையில் அமிர்தகலசம் உள்ளது. இது என்றும் அழிவில்லாத் தன்மையை உணர்த்துகிறது. நான்காவது கையில் ஒரு புத்தகம் உள்ளது. இது ஸர்வ வித்யா ஸ்வரூபத்தை விளக்குகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum